மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன்

குறிப்பாக, சினிமாவில் அந்த இளைஞர்களின் குரல், அவங்க மனசு பதிவாகவில்லையோ என்று தோன்றுகிறது. அவர்களுக்கு விருப்பமான படங்கள் வராமல், பான் இந்தியா படங்களாக நாம் எடுக்கிறோம் என்பதை அந்த கூட்டத்தை பார்த்தபோது எனக்கு தோன்றியது. அவர்கள் குரல் பேசப்பட வேண்டும். அவர்கள் உலகம் என்ன என்பது நாம் காண்பிக்கவில்லை. மலையாளம், கன்னட சினிமாவில் இளைஞர்களின் மனசு, உலகம், அவர்கள் மொழி, அவர்கள் காதலை பதிவு செய்கிறார்கள். தமிழில் அந்த நிலை இல்லை. இப்போது பூக்கி காதல் படமாக வருவது மகிழ்ச்சி"" என்று முடித்தார்.
இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கும், வசந்தபாலனுக்கும் சண்டை சச்சரவு இல்லை. எந்த அரசியல் கட்சியிலும் வசந்தபாலன் இல்லை. ஆனாலும், அரசியல் மாநாடு குறித்து, விஜய் பெயரை குறிப்பிடாமல் அவர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். தவிர, வசந்தபாலன் சொன்ன கருத்திலும் உண்மை இருக்கிறது.
நாம் ஹீரோயிச, ஆக் ஷன், பேய், காமெடி படங்களை எடுக்கிறோம். நல்ல காதல் படங்களை, யூத் படங்களை எடுப்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் யூத் ஹீரோக்களே குறைவு என்கிறார்கள் அந்த பேச்சை உன்னிப்பாக கவனித்தவர்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!