விட்டதை வட்டியும் முதலுமாக வசூலிக்கும் அமரன்
மார் 22, 2026

அமரன் நடிகர், உலக நடிகர் தயாரித்த படத்தில் நடித்தபோது, படக்கூலி விவகாரத்தில் ரொம்ப மோசம் செய்து விட்டாராம், உலக நடிகர். பேசியதில் பாதி கூட கொடுக்கவில்லையாம். இதனால், உஷாராகி விட்ட, அமரன் நடிகர், தற்போது மீண்டும் உலக நடிகர் கம்பெனியில் தான் நடிக்கும் படத்திற்காக, தன் மேனேஜரை வைத்து படக்கூலியை கறாராக பேசிவிட்டார்.
குறிப்பாக, கடந்த படத்தில் நடித்தபோது விட்ட தொகையையும் சேர்த்து இந்த படத்தில் எடுத்து விட வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய தொகையை தன் சம்பளமாக சொல்லி, உலக நடிகருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார், அமரன் நடிகர். இதனால், ஏற்கனவே அவரிடம் டபாய்த்ததையும் சேர்த்து வட்டியும் முதலுமாக கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், உலக நடிகர்.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.