Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

638
அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
குறள் விளக்கம் :

மு.வ : அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.


சாலமன் பாப்பையா : அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us