நல்ல கதைக்காக காத்திருந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

எஸ்.ஆர் புரொடக்ஷன் சார்பில் ஜெகதீஸ் தயாரிக்கும் படம் "அண்டர் 18". வெற்றிமாறன் உதவியாளர் கார்த்திக் பெருமாள்சாமி இயக்குகிறார். கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேசுக்கு கடந்த சில வருடங்களாக நல்ல படங்கள் அமையவில்லை. அவர் நடித்து முடித்துள்ள "துருவ நட்சத்திரம், கருப்பர் நகரம், மோகன்தாஸ்" படங்கள் வெளிவரவில்லை. இந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் தனக்கு நல்ல திருப்பம் தரும் என்று நம்புகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு பலனாக "அண்டர் 18" படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம். முழு படக்குழுவினருடன் இணைந்து ஒரு சிறந்த படத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.