தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்று விட்டார். ஒரு பக்கம் திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் சார்பற்றவர்கள் அவரது வெற்றியை பாராட்டுகின்றனர். அதே சமயம் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் விஜய் பொறுப்பேற்ற இந்த 20 நாட்களிலேயே பல விஷயங்களில் கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மலையாள திரையுலகில் இருந்து பா.ஜ., கட்சியில் இணைந்து தற்போது மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் நடிகர் சுரேஷ்கோபியிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ்கோபி, “முதல்வர் விஜய்யை இப்போதே விமர்சிப்பது சரியல்ல. மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர் வேலை செய்து தன்னை நிரூபிக்கட்டும். அவரை வேலை செய்ய விடுங்கள். தன்னை நிரூபிக்க அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் கேரளாவிலும் விஜய்யின் கட்சிக்கான அமைப்பு துவங்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்தும் சுரேஷ் கோபியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் வெற்றி பெற்ற கட்சி கேரளாவில் வருவதில் என்ன பிரச்னை? அவர் வரட்டும்.. எங்கு வேண்டுமானாலும் கட்சியை விரிவுபடுத்தட்டும். எல்லோரும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட விஜய்க்கு பாஜக கட்சியில் இருந்து ஒரு ஆதரவுக்குரல் எழுந்திருப்பது ஆச்சரியம்தான்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.