எல்ஐகே.,வில் நயன்தாரா இணை தயாரிப்பாளராக இணைந்தது ஏன் - விக்னேஷ் சிவன் பதில்

விக்னேஷ் சிவன் கூறுகையில், "எல்.ஐ.கே படத்தை முதலில் வேறொரு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புக்கு செல்லாமல் 10 மாதங்கள் காத்திருந்தோம். பின்னர் 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற காலத்தில் டிஜிட்டல் மார்கெட் சரிந்தது. இதனால் இந்த படத்தை ரூ.210 கோடியில் உருவாக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.150 கோடி பட்ஜெட் ஆக குறைத்தோம். அதன் பிறகு ரூ.100 கோடி வரை பட்ஜெட்டை குறைத்தோம். அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் லலித் டிஜிட்டல் மார்கெட்டின் சரிவால் பைனான்ஸ் கிடைக்க கஷ்டப்பட்டார். இதனால் தான் நயன்தாரா இந்த படத்தில் இணை தயாரிப்பாளர் ஆக இணைந்து தனது சொந்த பணத்தை முதலீடு செய்தார். பட்ஜெட் பிரச்னையால் படத்தின் தரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட வேண்டாம் என நினைத்தோம்" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.