
நவரசா படப்பிடிப்பை முடித்த சித்தார்த் - பார்வதி
மார் 31, 2021
Advertisement
தமிழ் திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக நிதி திரட்டும் விதமாக "நவரசா" என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் இதில் இடம் பெறுகின்றன. இதில் ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள "இன்மை" என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார் நடிகை பார்வதி. நாயகனாக சித்தார்த் நடித்துள்ளார். இதை மரியான் பட இயக்குனர் பரத் பாலா தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிபை முடித்துள்ள பார்வதி, இந்தப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டள்ளார். மேலும் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், “என்ன ஒரு நாளாக அது இருந்தது..!! நவரசாவில் நானும் ஒரு பாகமாக "இன்மை" என்கிற ரொம்பவே புத்திசாலித்தனமான குறும்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நானும் ஒரு பாகமாக இருக்கும் வாய்பை பெற்றேன்.. அதுமட்டுமல்ல, மரியான் படத்தை அடுத்து எட்டு வருடங்களுக்கு பிறகு பரத்பாலாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார் பார்வதி.
இதன் படப்பிடிபை முடித்துள்ள பார்வதி, இந்தப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டள்ளார். மேலும் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், “என்ன ஒரு நாளாக அது இருந்தது..!! நவரசாவில் நானும் ஒரு பாகமாக "இன்மை" என்கிற ரொம்பவே புத்திசாலித்தனமான குறும்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நானும் ஒரு பாகமாக இருக்கும் வாய்பை பெற்றேன்.. அதுமட்டுமல்ல, மரியான் படத்தை அடுத்து எட்டு வருடங்களுக்கு பிறகு பரத்பாலாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார் பார்வதி.
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!