
சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி
""என்னுடன் திரவுபதி2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்"" என்று மோகன்.ஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் பேரரசு புது கருத்தை கூறியுள்ளார். ""இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே... பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு, உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் மோகன்ஜி வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது! என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். படம் வெளியாகும்முன்பே, முதல் பாடல் வெளியான நேரத்தில் இருந்து திரவுபதி 2 சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே சின்மயி மன்னிப்பு கேட்டது தெடர்பாக மாலை 4 மணிக்கு மேல் ஒரு வீடியோ வெளியிடுவதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார். சின்மயி சொல்வது என்ன சித்தாந்தம் என தெரியவில்லை, அதுபற்றி எனக்கு புரியவும் இல்லை என்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!