Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

PUBLISHED ON : ஏப் 28, 2025


Google News
Latest Tamil News
பின்வரும் கூற்றுகள் மெய்யா, பொய்யா என்று சொல்லுங்கள்:

1. வெள்ளி கோளுக்கு முதன்முதலில் விண்கலம் அனுப்பிய நாடு சீனா.

2. மௌனா லோவா (Mauna Loa) எரிமலை ஹவாய் தீவில் உள்ளது.

3. உலகிலேயே அதிகமான அரிசி உற்பத்தி செய்யும் நாடு இந்தோனேசியா.

4. மங்கோலிய நாட்டில் கடற்கரையே இல்லை.

5. யாங்சி என்பது உலகின் மூன்றாவது நீளமான ஆறு.

விடைகள்:

1) பொய். சோவியத் யூனியன் வெனிரா என்ற பெயரில் தொடர்ந்து விண்கலன்களை வெள்ளிக்கு அனுப்பியது. வெனிரா 1 தான் வெள்ளிக்கு மிக அருகில் சென்ற முதல் விண்கலம்.

2) மெய். இது உலகின் மிகப் பெரிய எரிமலை.

3) பொய். அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா. இரண்டாம் இடம் இந்தியா. நான்காம் இடத்தில் இந்தோனேசியா உள்ளது.

4) மெய். வடக்கே ரஷ்யா, தெற்கே சீனா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட நாடான மங்கோலியாவுக்கு அருகில் கடலே இல்லை.

5) மெய். 6,300 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு ஆசியாவின் மிகப் பெரிய ஆறு ஆகும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us