Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எம்.ஜி.ஆர்., பல்கலை., கட்டடம் இடிப்பு

எம்.ஜி.ஆர்., பல்கலை., கட்டடம் இடிப்பு

எம்.ஜி.ஆர்., பல்கலை., கட்டடம் இடிப்பு

எம்.ஜி.ஆர்., பல்கலை., கட்டடம் இடிப்பு

UPDATED : ஆக 20, 2011 04:48 PMADDED : ஆக 20, 2011 01:57 PM


Google News
சென்னை: ஏரியை ஆக்கிரமித்து கட்டியதாக எம்.ஜி.ஆர்., பல்கலை.,யின் சில கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையையடுத்த மதுரவாயிலில் ஏரியில் 2.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எழுந்தன. இந்த ஏரியில் எம்.ஜிஆர்., பல்கலைகழகம் 43 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டி கோவில், ஏ.டி.எம்., அமைத்திருந்தது. இதேபோல் மற்றவர்களும் ஏரியை ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பாக புகார்கள் வந்தன. இதனையடுத்து அம்பத்தூர் ஆர்.டி.ஓ., தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் எம்.ஜி.ஆர்., பல்கலைகழகம் ஆக்கிரமித்திருந்தவற்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்றவர்களும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்பு பணி நடக்கப்போவதை முன்னரே தெரிந்து கொண்ட பல்கலைகழக நிர்வாகம் கடந்த 18ம் தேதி முதல் பல்கலைகழக மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us