Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தாகூர் கல்லூரியில் புதிய பாடம் துவக்கம்

தாகூர் கல்லூரியில் புதிய பாடம் துவக்கம்

தாகூர் கல்லூரியில் புதிய பாடம் துவக்கம்

தாகூர் கல்லூரியில் புதிய பாடம் துவக்கம்

ADDED : ஆக 05, 2011 04:12 AM


Google News
புதுச்சேரி : தாகூர் கலைக்கல்லூரியில் புதிய பாடப் பிரிவிற்கான துவக்க விழா நடந்தது.பொன்விழா ஆண்டை முன்னிட்டு புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி மேலாண்மை(உஙஉNகூ MஅNஅஎஉMஉNகூ) என்ற பாடப் பிரிவின் துவக்க விழா நேற்று காலை கல்லூரி வளாகத்தில் நடந்தது.

ஏற்கனவே கல்லூரியில் இயங்கி வரும் பி.பி.ஏ., பட்டப்படிப்பின் இறுதியாண்டின்போது, நிகழ்ச்சி மேலாண்மை (6 மாத படிப்பு) பாடத்தையும் சேர்ந்து படிக்கும் வகையில் புதிய பாடப்பிரிவு செயல்படுத்தப்பட உள்ளது.துவக்க விழாவில் சுற்றுலாத் துறை தலைவர் அண்ணாமலை முருகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத் துறை இயக்குனர் சிவக்குமார் கலந்து கொண்டு புதிய வகுப்புகளைத் துவக்கி வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us