'ஏழடி' போர்வெல்; கோவையில் நடந்த பெருங்கூத்து!
'ஏழடி' போர்வெல்; கோவையில் நடந்த பெருங்கூத்து!
'ஏழடி' போர்வெல்; கோவையில் நடந்த பெருங்கூத்து!

போலி கட்டமைப்பு
மின் வாரியத்தை ஏமாற்றி, மும்முனை இணைப்பு பெறுவதற்காக, 18ம் தேதி, இந்நிலத்துக்கு அருகே சாலையை ஒட்டி, போர்வெல் போட்டிருப்பது போல் போலியாக ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தி, 'ஒயரிங்' செய்யப்பட்டு, மின் கம்பத்தில் 'பியூஸ் கேரியர்' பெட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. போர்வெல் போட்டதற்கு அடையாளமாக, குழாயை சுற்றிலும் 'எம் சாண்ட்' கொட்டப்பட்டிருந்தது.
போர்வெல் போல் ஜோடனை
அவ்விடத்தின் உச்சியில் மின் ஒயர்கள் செல்வதால், போர்வெல் இயந்திரம் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை. குழியை தோண்டி, குழாய் பதித்து, சுற்றிலும் 'எம் சாண்ட்' கொட்டி, போர்வெல் போட்டதுபோல் ஜோடனை செய்திருந்தது தெரியவந்தது.
பேரூராட்சி விளக்கம்
இச்சூழலில், என்ன நடந்தது என பேரூராட்சி சார்பில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில், போர்வெல் போட்டது போல் போலியாக தோற்றம் ஏற்படுத்தியதே தவறு. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.
கள்ளக்கணக்கு எத்தனையோ!
மாவட்டம் முழுவதும் இதுபோல், எத்தனை இடங்களில் போர்வெல் போட்டதாக கணக்கெழுதி, பணம் சுருட்டப்பட்டதோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விஷயத்தில், தங்களுக்குள் சமரசம் ஏற்படுத்திக் கொள்ளாமல், உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து, உண்மையை கண்டறிந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் நேர்மையாக செயல்படுகிறது என்பதாக இருக்கும். இல்லையெனில், இம்முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தை என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.