ADDED : அக் 01, 2011 12:28 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் நெஞ்சுவலியால் பாதித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.சென்னை குன்றத்தூர் பாலவராயர் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 57.
இவர் விழுப்புரத்தில் உள்ள நண்பர் ராஜப்பன் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் காலை ராஜப்பன் வீட்டில் இருந்தபோது, ராஜமாணிக்கத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.