வேலூர்: வேலூர் அரசு பெண்லண்ட் மருத்துவனையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மருக்கு, பெயிண்ட் அடிக்க ரவி என்ற காண்ட்ராக்டர் டெண்டர் எடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சசிக்குமார் இறந்தார். சிகிச்சை அளித்ததற்கு பணம் செலுத்தி விட்டு, பிணத்தை எடுத்துச் செல்லும்படி மருத்துவனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சசிகுமாரின் உறவினர்கள், வெங்கட்டாபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார் தலைமையில் அலமேலு மங்காபுரத்தில் நேற்று மாலை சாலை மறியல் செய்தனர். இறந்த சசிகுமார் குடும்பத்தினருக்கு அமைச்சர் விஜய் உரிய நஷ்டஈடு தர வேண்டும், மருத்துவனை செலவை அமைச்சரே ஏற்க வேண்டும். பேச்சு வார்த்தை நடத்த கலெக்டர் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஏ.டி.எஸ்.பி., பட்டாபி தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. சாலை மறியலால் சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிரடிப்படையினர் சாலை மறயில் செய்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், வேலூர் ஆர்.டி.ஓ., ஜெயஸ்ரீ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நஷ்டஈடு தருவதாக கூறப்பட்டது. சாலை மறியலால் இரவு 9 மணி வரை போக்குவரத்து பாதித்தது.


