/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வக்கீல் மீது தாக்குதல் தந்தை, மகன் "அரஸ்ட்'வக்கீல் மீது தாக்குதல் தந்தை, மகன் "அரஸ்ட்'
வக்கீல் மீது தாக்குதல் தந்தை, மகன் "அரஸ்ட்'
வக்கீல் மீது தாக்குதல் தந்தை, மகன் "அரஸ்ட்'
வக்கீல் மீது தாக்குதல் தந்தை, மகன் "அரஸ்ட்'
ADDED : செப் 20, 2011 11:39 PM
திருச்சி: திருச்சியில் ரோட்டில் நடந்த சண்டையில் வக்கீலைத் தாக்கிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பைசல் ரகுமான்.
இவர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அப்துல் லவீத் (21) திருமயம் அருகேயுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையும், மகனும் ஹோண்டா பைக்கில் புத்தூர் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஹோண்டா பைக்கில் வந்த வக்கீல் சுரேஷ், மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் முறையில் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். இதை பைசல் ரகுமானும், அவரது மகன் அப்துல் லவீத்தும் தட்டிக்கேட்டுள்ளனர். இதுதொடர்பாக நடந்த சண்டையில் வக்கீல் சுரேஷை, தந்தையும், மகனும் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த வக்கீல் சுரேஷ் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், பைசல் ரகுமானும், அவரது மகன் அப்துல் லவீத்தும் கைது செய்யப்பட்டனர்.