ADDED : செப் 15, 2011 04:07 AM
புதுச்சேரி:தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என, மா.கம்யூ., நல்லாம்
கிளினிக் ஆட்டோ தொழிலாளர் கிளை மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
மா.கம்யூ., நல்லாம் கிளினிக் ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் பெருமாள்
கோவில் ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை 2ம் மாநாடு ஆம்பூர் சாலையில்
நடந்தது.மாநாட்டு கொடியை கன்னியப்பன் ஏற்றினார். நகர குழு மணவாளன் தலைமை
தாங்கினார். செயலாளர் சீனுவாசன் துவக்கவுரையாற்றினார். மதிவாணன் வேலை
அறிக்கை வாசித்தார்.சி.ஐ.டி.யூ., பிரதேச தலைவர் ராமசாமி வாழ்த்துரை
வழங்கினார். மா.கம்யூ., செயற்குழு முருகன், ராஜாங்கம் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். பெருமாள் நன்றி கூறினார்.


