Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : செப் 25, 2011 12:00 AM


Google News

அறிவியல் ஆயிரம்



பொறியாளருக்கு பெருமை



செப்டம்பர் 15ம் நாளை பொறியாளர் தினமாக கொண்டாடுகின்றோம்.

இது இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நாட்களை பொறியாளர் தினமாகக் கொண்டாடுகின்றன. கொலம்பியாவில் ஆகஸ்ட் 17, மெக்சிகோவில் ஜூலை 1 பொறியாளர் தினமாகக் கொண்டாடப் படுகின்றன. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவில் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டிய போது விஸ்வேஸ்வரய்யா தான் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார்.வட மாநிலங்களிலும், பல அணைகளின் கட்டுமானத்தில் இவர் தலைமைப் பொறியாளராக பணியாற்றியுள்ளார். மத்திய அரசு இவரது சேவைகளை பாராட்டி, பாரத ரத்னா விருது வழங்கியது.



தகவல் சுரங்கம்



இந்தியாவின் முதல்தூக்கு தண்டனை



சுதந்திர இந்தியாவில், முதல் தூக்கு தண்டனை காந்தியடிகளைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேக்கும், கொலைக்கு உடந்தையாக நாராயணன் ஆப்தேக்கும் வழங்கப்பட்டது. 1949 நவம்பர் 15ல் அம்பாலா சிறையில் தான் தூக்கு தண்டனை நிறைவேறியது.தூக்கு தண்டனைக்கு முந்தைய கோட்சேயின் ஆசை 'பிரிக்கப்படாத அகண்ட பாரதத்தில் பாயும் சிந்து நதியில் தன்னுடைய அஸ்தியைக் கரைக்க வேண்டும்' என்பதாகும். கோட்சேயின் ஆசை இன்னும் நிறைவேறவில்லை. ஏனெனில் சிந்து நதி பாகிஸ்தானில் பாய்கிறது. எனவே கோட்சேயின் குடும்பத்தினர் அவரது அஸ்தியை பாதுகாத்து வருகின்றனர். கோட்சே குறித்த விசாரணையும், தண்டனையும் இந்தி, மராட்டி நாடக உலகில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'மீ நாதுராம் கோட்சே போல்தாய்', 'நான் கோட்சே பேசுகின்றேன்' என்ற மராட்டிய மொழி நாடகம், பார்லிமென்ட் வரை பரபரப்பை ஏற்படுத்தி நாடகத்தை நிறுத்தும் சூழ்நிலை உருவாகியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us