Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

தென்காசி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

தென்காசி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

தென்காசி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

ADDED : ஆக 15, 2011 01:29 AM


Google News

தென்காசி : தென்காசி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி பலியானார்.தென்காசி அருகேயுள்ள அழகப்பபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (37).

கூலி தொழிலாளி. இவர் நேற்று இப்பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி தேன் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை தேனீக்கள் கொட்டிதால் நிலை தடுமாறி மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us