Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஈரான் பதில் தாக்குதல் பலவீனமானது: 13 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் தகவல்!

ஈரான் பதில் தாக்குதல் பலவீனமானது: 13 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் தகவல்!

ஈரான் பதில் தாக்குதல் பலவீனமானது: 13 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் தகவல்!

ஈரான் பதில் தாக்குதல் பலவீனமானது: 13 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் தகவல்!

ADDED : ஜூன் 24, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ''அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் மிகவும் பலவீனமானது. ஈரானின் 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரான் அணுசக்தி நிலையங்களில் தாக்குதல் நடத்தினோம். இதற்கு, அமெரிக்கா மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல் பலவீனமானது. அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். அதை மிகவும் திறம்பட எதிர்கொண்டோம். ஈரான் ஏவிய 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஒரு ஏவுகணை விடுவிக்கப்பட்டது. அது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை. எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை. எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன்.

தாக்குதல் நடத்த போகிறோம் என்பதை எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதனால் யாரும் உயிரிழக்கவோ, யாரும் காயமடையவோ இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us