Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஈரான் சம்மதம்!

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஈரான் சம்மதம்!

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஈரான் சம்மதம்!

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஈரான் சம்மதம்!

UPDATED : ஜூன் 24, 2025 11:38 AMADDED : ஜூன் 24, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. முன்னதாக, இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், ''இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும்.

24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும்'' என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறியதாவது: இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது. தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்த தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறிய ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பின்னர் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இரவு 7 மணி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று இஸ்ரேல் அறிவித்தது.

இஸ்ரேல் பிரதமருடன் அதிபர் டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டின் தலைவர்களுடன் கத்தார் நாட்டின் தலைவர்கள் நேரடியாக பேசி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us