Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/டில்லியில் ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க., அழைப்பு

டில்லியில் ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க., அழைப்பு

டில்லியில் ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க., அழைப்பு

டில்லியில் ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க., அழைப்பு

ADDED : ஆக 07, 2011 01:48 AM


Google News
பெரம்பலூர்: 'டில்லியில் வரும் 12ம் தேதி ம.தி.மு.க., சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என ம.தி.மு.க., பெரம்பலூர் நகர செயலாளர் சின்னராஜேந்திரன், கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ம.தி.மு.க., சார்பில் வரும் 12ம் தேதி டில்லியில் பார்லிமென்ட் முன் இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் 100 பேர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கட்சி தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us