Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ முறத்தால் அடிக்கும் வினோத திருவிழா

முறத்தால் அடிக்கும் வினோத திருவிழா

முறத்தால் அடிக்கும் வினோத திருவிழா

முறத்தால் அடிக்கும் வினோத திருவிழா

ADDED : ஜூன் 07, 2024 07:36 PM


Google News
Latest Tamil News
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, முறத்தால் பக்தர்களை அடிக்கும் வினோத திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது. முறத்தால் அடி வாங்கினால் தீய சக்தி விலகும், நல்லது நடக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதன்படி, பெரம்பலுார் மாவட்டம், பிரம்மதேசம் அருள்மிகு திரௌபதை அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவில் திருவிழா கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அர்ச்சுனன் வில்வளைத்தல், திரெளபதை அம்மன் திருக்கல்யாணம், உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முறத்தால் அடிக்கும் விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. திருக்கோவிலில் இருந்து பல்வேறு வேடமிட்டு மருளாளிகள் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள ஏரிக் கரையில அர்ச்சுனன் மாடு திருப்புதல் விழாவும், அதனையடுத்து வல்லாளகோட்டை இடித்து மருளாளிகள் முறத்தால் பக்தர்களை அடிக்கும் வினோத திருவிழா நேற்று நடந்தது.

விழாவில் முறத்தால் அடி வாங்கினால் பேய், பில்லி சூனியம் பயம் தெளியவும், நினைத்த காரியம் நடக்கும் என்பதால் திரளான பக்தர்கள் முறத்தால் அடி வாங்கினர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us