ADDED : ஆக 07, 2011 01:46 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே பீடா கடையில் அனுமதியின்றி மதுபானம் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.காரிமங்கலம் அடுத்த சென்னம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி.
இவர் அப்பகுதியில் பீடா கடை வைத்துள்ளார். இக்கடையில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. காரிமங்கலம் போலீஸார் அவரது கடையில் சோதனை நடத்தி 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.