ADDED : அக் 13, 2011 02:06 AM
புதுச்சேரி:ரேஷன் கடைகளில் 15 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.
முதல்வராக
ரங்கசாமி பொறுப்பேற்ற போது, மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும்
15 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருத்தார்.முதல்வர்
அறிவித்தபடி மாதந்தோறும் இலவச அரிசி முறையாக வழங்கப்படுவதில்லை என்று
அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தடையின்றி
இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் நீண்ட வரிசையில் நின்று
அரிசியை வாங்கி சென்றனர்.


