ADDED : செப் 12, 2011 03:49 AM
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், காவேரி பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவில்
மெகா சைஸ் பள்ளம் உள்ளது.
அந்தப் பள்ளம், தொடர் மழைப்பொழிவு காரணமாக மேலும்
பெரிதாகி வருகிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் இறங்கி
விபத்து ஏற்படும் அபாய சூழல் உள்ளது.பல மாதங்களாக இதே சூழல் நிலவி
வருகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, சாலையின்
நடுவில் உள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.