/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வரும் 4ல் டாஸ்மாக் கடை விடுமுறைலோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வரும் 4ல் டாஸ்மாக் கடை விடுமுறை
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வரும் 4ல் டாஸ்மாக் கடை விடுமுறை
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வரும் 4ல் டாஸ்மாக் கடை விடுமுறை
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வரும் 4ல் டாஸ்மாக் கடை விடுமுறை
ADDED : ஜூன் 01, 2024 06:21 AM
நாமக்கல் : 'வரும், 4ல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, அன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில், காலை, 6:00 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை மதுபான கடைகளை மூட வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுதும், வரும், 4ல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி, அன்றைய தினம், காலை, 6:00 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை அனைத்து கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிம வளாகங்களை, நாள் முழுவதும் மூட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், வரும், 4ல் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.