/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வலியுறுத்தல்மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வலியுறுத்தல்
மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வலியுறுத்தல்
மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வலியுறுத்தல்
மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வலியுறுத்தல்
புதுச்சேரி : இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கையை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ளஅறிக்கை: தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் தங்கள் அளவிலேயே நுழைவுத் தேர்வு நடத்தி எம்.பி.
வறுமை நிலையிலும், போதிய அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளில் பயின்று வரும் கிராமப்புற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவர். சமுதாயத்தில் அடித்தட்டு மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் அரசின் நோக்கத்தை இந்த நுழைவுத் தேர்வுமுறை சீர்குலைந்து விடும்.எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துவதை ரத்து செய்துவிட்டு, மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கையை நடத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கை கூறப்பட்டுள்ளது.