ADDED : ஜூலை 17, 2011 01:35 AM
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஐவேலி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜவேல் மகன் ராஜேஷ் (26).
இவர் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு சின்ன நெற்குணம் ஊராட்சிப் பள்ளி மைதானம் அருகில் நின்று அசிங்கமாக பேசினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் போகும்படி கூறியும் கேட்காததால் அவரை மயிலம் போலீசார் கைது செய்தனர்.