சுரங்க ஊழல் ஸ்ரீனிவாச ரெட்டி லாக்கர்களை திறந்து சி.பி.ஐ.,சோதனை
சுரங்க ஊழல் ஸ்ரீனிவாச ரெட்டி லாக்கர்களை திறந்து சி.பி.ஐ.,சோதனை
சுரங்க ஊழல் ஸ்ரீனிவாச ரெட்டி லாக்கர்களை திறந்து சி.பி.ஐ.,சோதனை

இது மட்டுமின்றி, பெல்லாரியிலிருந்து கடந்த 15ம் தேதி, லாரியில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 4.9 கோடி ரூபாய் பணம் குறித்தும், ஸ்ரீனிவாச ரெட்டியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.பணம் கடத்தி வர பயன்படுத்திய லாரியை ஓட்டியவர்கள், 'லாரியில் இருந்த பணம், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமானது. சுரங்கத் தொழிலுக்காக, கர்நாடகாவிலிருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளதால், இந்த விசாரணை நடைபெற்றது.
'விசாரணைக்கு தயார்':கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் தொழில் கூட்டாளியும், அம்மாநில சட்டசபை எம்.எல்.ஏ., பதவியை கடந்த 4ம் தேதி ராஜினாமா செய்தவருமான ஸ்ரீராமுலு நேற்று பெல்லாரியில் நிருபர்களிடம் கூறுகையில், ''சுரங்க ஊழல் விசாரணை தொடர்பாக, சி.பி.ஐ., தரப்பில் இருந்து எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. நோட்டீஸ் வந்தால், வழக்கு விசாரணைகளில் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.''ஊடகங்களில் கூறப்படுவது போல, தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தது செய்தது தான். எனது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன். இது தொடர்பாக, தனிப்பட்ட முறையில் எனது கருத்துக்களை சட்டசபை சபாநாயகரிடம் கூறியுள்ளேன்,'' என்றார்.