/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழாபள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வாசவி கிளப், வனிதா கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு துணை தலைவர் ஸ்ரீராம் செட்டி தலைமை தாங்கினார். சீனுவாசன் முன்னிலை வகித்தார். ரங்கநாதன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை துணை ஆளுநர் நாராயணகுப்தா, ரோட்டரி சங்க தலைவர் செல்வகுமார் வழங்கினார்.வாசவி கிளப் தலைவர் பெருமாள், நிர்வாகிகள் அனந்தராம்குமார், பத்ரிநாராயணன், வனிதா கிளப் தலைவி ஹேமலதா, நிர்வாகிகள் நாகலட்சுமி, கவிதா கலந்து கொண்டனர்.முன்னதாக கள்ளக்குறிச்சி வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலை சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டனர்.