/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகரில் நில மோசடி ஓய்வு பி.டி.ஓ., கைதுவிருதுநகரில் நில மோசடி ஓய்வு பி.டி.ஓ., கைது
விருதுநகரில் நில மோசடி ஓய்வு பி.டி.ஓ., கைது
விருதுநகரில் நில மோசடி ஓய்வு பி.டி.ஓ., கைது
விருதுநகரில் நில மோசடி ஓய்வு பி.டி.ஓ., கைது
ADDED : ஆக 04, 2011 11:27 PM
விருதுநகர்:விருதுநகரில் நில மோசடி வழக்கில், விருப்ப ஓய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரிடம்
விருதுநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த பார்த்தசாரதி மனைவி தனலட்சுமி,
மகன்கள் ராமபிரான், முகுந்தன், மகள்கள் சாந்திலட்சுமி, கோகிலாராணி மற்றும்
பாலவநத்தம் பவுன்ராஜ் மனைவி விஜயலட்சுமி(55) ஆகியோர் விருதுநகர்
கட்டபொம்மன் தெருவில் உள்ள இடத்தை விற்பதற்காக விலை பேசினர். இதில்
விஜயலட்சுமி விருப்ப ஓய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., ஆவார்.
தனலட்சுமியும் விஜயலட்சுமியும் உறவினர்கள். முதல் தவணையாக 2009 டிசம்பர்
31ல் ஒரு லட்சம் ரூபாய் அட்வான்சாக பெற்று கொண்டனர். 2010 ஜூன் 7, 8
தேதிகளில் தனலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் தலா 2. 50 லட்சம் ரூபாய்க்கான
காசோலையுடன் ஆறு லட்சம் ரூபாய் பெற்றனர்.
2010 டிசம்பர் 10 ல் கிரையம்
செய்வதாக ஓப்புக்கொண்டனர். அதன்படி பழனியப்பன் பத்திரபதிவு அலுவலகத்தில்
ஆவணங்களுடன் காத்திருந்த நிலையில், மேற்கண்ட நபர்கள் யாரும் வரவில்லை.
பணத்தையும் திருப்பி தரவில்லை. 'அட்வான்ஸ்' பணம் தரும்போது தனலட்சுமி மகன்
முகுந்தனுக்கு வயது 16. அவர் மைனராக இருந்ததை மறைத்து தன்னை மோசடி
செய்ததாக, விருதுநகர் ஜே.எம். 1 ,கோர்ட்டில் பழனியப்பன் மனு செய்தார். இதை
விசாரித்த மாஜிஸ்திரேட் சசிரேகா,''விஜயலட்சுமியை கைது செய்ய,''
உத்தரவிட்டார். அதன்படி விருதுநகர் மேற்கு போலீசார், ஓய்வு பி.டி.ஓ.,
விஜயலட்சுமியை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் முன்ஜாமினில்
உள்ளனர்.