Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இருவழிப் பாதை பணி: பொறியாளர்கள் ஆய்வு

இருவழிப் பாதை பணி: பொறியாளர்கள் ஆய்வு

இருவழிப் பாதை பணி: பொறியாளர்கள் ஆய்வு

இருவழிப் பாதை பணி: பொறியாளர்கள் ஆய்வு

ADDED : அக் 03, 2011 12:17 AM


Google News
விழுப்புரம்;செங்கல்பட்டு- முண்டியம்பாக்கம் வரை முடிந்துள்ள, முதற்கட்ட இருவழி ரயில் பாதைக்கான பணிகளை, சென்னை பொறியாளர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.செங்கல்பட்டு- விழுப்புரம் வரை, இருவழி தண்டவாளப் பாதைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முண்டியம்பாக்கம் வரையிலும் முடிவடைந்துள்ள பணிகளை, சென்னை பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஐவர் அடங்கிய குழு, நேற்று மாலை 3 மணியளவில், திடீர் ஆய்வு செய்தது.ஓ.எச்.இ.,(ஓவர் ஹைட் எக்யூப்மென்ட்) சிறப்பு ரயில் பெட்டி மூலம், இக்குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில், இருவழிப் பாதை தண்டவாளத்தில், ரயில் செல்லக்கூடிய வேக அளவு, மேற்புறம் இணைக்கப்பட்டுள்ள மின் பகிர்மான அளவு (வார்ட்ஸ்), ஆகியவை கண்டறியப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us