ADDED : அக் 01, 2011 12:28 AM
விழுப்புரம் : குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் ராகவன்பேட்டை சுப்ரமணிய நகரைச் சேர்ந்தவர் கணேசன், 36.
இவரது மனைவி தரணி, 31. கணேசன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கணேசன் தனி அறைக்குள் சென்று மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.