ADDED : ஆக 05, 2011 02:39 AM
சென்னை : காவிரி ஆற்றின் குறுக்கே, 32 கோடி ரூபாய் செலவில், தடுப்பணை கட்டப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே, முத்தரசநல்லூரில், 32 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படும்.
10 கோடி ரூபாய் செலவில், மகளிருக்கென தோட்டக் கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், 4 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய அறிவியல், கலைக் கல்லூரி, 36 கோடியே, 40 லட்ச ரூபாய் செலவில், ஸ்ரீரங்கத்தில் பயணியர் விடுதி, தேசிய சட்டப்பள்ளி, இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவையும், ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிதாக துவக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.