
'பெண்களேசரியா டிரைவ்பண்றீங்களா?'
விட்டுக் கொடுப்பதும் ஒரு நாகரிமான சாலை விதிதான்.பெரும்பாலான பெண்கள் ஹெல்மெட் போடாமல், முகத்திற்கு மாஸ்க் மட்டும் போட்டுக்கொள்வது மிகவும் ஆபத்தானது. வாகன நெருக்கடியில், ஒரு டூவீலர் மற்றொரு வண்டிக்கு மிக அருகில் நிற்பதும், கடப்பதும் தவிர்க்க முடியாதது. சிக்னல்களில் யாராவது ஒரு ஆண் தனக்கு நெருக்கமாக வண்டியை நிறுத்தி விட்டால் அவரைத் தப்பாய் நினைத்து பதட்டமாவது, அதீத வேகத்தில் போவது போன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.எல்லாப் பெண்களும், தங்கள் வண்டியின் எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திடீர் என வண்டி பஞ்சராயிட்டா, ஸ்டெப்னி மாற்றுவது வரை கூட அறிந்திருப்பது நல்லது. வண்டி ஓட்டும் போது சேலையை விட சுடிதார் சிறந்தது. ஆனால், துப்பட்டாவை பாதுகாப்பாக பின் பண்ணிக்கனும். ரெம்ப முக்கியமான விஷயம், லைசென்ஸ் வாங்காமல் வண்டியை தொடக் கூடாது.