ADDED : செப் 04, 2011 11:21 PM
விழுப்புரம் : விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்புவோரிடம் மனுக்கள் பெறப்படுகின்றன.
கடந்த 2ம் தேதி விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி துவங்கியது. முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் தலைமையில், மாவட்ட செயலாளள் சண்முகம் மனுக்களை வழங்கினார். நேற்று வரை (3 நாட்களில்) 550 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை வழங்கியுள்ளனர்.