ADDED : ஆக 28, 2011 11:25 PM
விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி சொற்பொழிவு நடந்தது.
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி கடந்த 22ம் தேதி உறியடி விழா நடந்தது. தொடர்ந்து 25ம் தேதி மாலை ஸப்தகிரி பஜனா மண்டலி தொல்காப்பியன், சங்கர் தலைமையில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த கணேஷ், கண்ணன் தூது தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.