ADDED : ஆக 01, 2011 02:41 AM
புதுச்சேரி : அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.லாஸ்பேட்டை அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்.
இவரது மகன் பொன்முகிலன், 22, பொறியியல் பட்டதாரி. இவர் தனது நண்பர்களைச் சந்திக்க நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டையில் இருந்து கோரிமேட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது ஜிப்மர் மருத்துவமனை முதல் நுழைவாயில் அருகே சென்ற போது அடையா ளம் தெரியாத வாகனம் பொன்முகிலனின் பின்புறமாக மோதியது. படுகாயம் அடைந்த பொன்முகிலனை அருகில் இருந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.