/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறதுகாரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
காரைக்கால் : காரைக்காலுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து, தடையின்றி நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டக்குழு போராட்டங்களை அறிவித்துள்ளது.காரைக்கால் போராட்டக்குழுவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நாட்டில் லஞ்சம், ஊழல் பெருத்துவிட்டது. கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. மாறாக ஊழலில் ஈடுபடும் பிரதமர், நீதிபதிகளைப் பாதுகாக்கும் கேடயமாக லோக்பால் மசோதாவை உருவாக்கியிருப்பது மக்களுக்கு எதிரான செயல். மன்மோகன் சிங் நாட்டை ஆளும் உரிமையை இழந்துவிட்டார். ஆகவே அவர் பதவி விலகவேண்டும்.காரைக்காலை தூய்மையான நகரமாக்க அரசு சிறப்புத் திட்டத்தை வகுத்து, உரிய நிதியை வழங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் வரை காரை பகுதிக்கு தனி பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, காரை பகுதி திட்டங்களுக்கு தடையின்றி நிதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம், பிரசாரம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.