Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாப பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாப பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாப பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாப பலி

ADDED : ஜூலை 25, 2011 02:05 AM


Google News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை அப்பன்ராவ் தெருவை சேர்ந்தவர் ஜாவித்பாட்ஷா. இவரது மகன் ஹரித்அகமத் (8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். மூன்று நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன், மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கால்தவறி மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த சிறுவனை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி சிறுவன் நேற்று இறந்தான். கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., சாந்தசீலன் விசாரிக்கின்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us