ADDED : செப் 23, 2011 01:08 AM
கூடலூர் : கூடலூரில் ஊட்டச்சத்து வாரவிழா சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் நடந்தது.
கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. உணவு முறை குறித்து, காய்கறிகளால் வடிவமைத்து கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுகன்யா, மேற்பார்வையாளர்கள் ஜெயக்குமாரி, சம்பத்நாயகி,ஜானகி பங்கேற்றனர்.