விசா பெற போலி டாக்குமென்ட்: 3 பேர் கைது
விசா பெற போலி டாக்குமென்ட்: 3 பேர் கைது
விசா பெற போலி டாக்குமென்ட்: 3 பேர் கைது
ADDED : ஜூலை 14, 2011 04:17 PM
சென்னை: அமெரிக்க விசா பெறுவதற்காக போலி ஆவணங்களை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த தயானந்த் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தர்மிஸ்தா ஆகிய இருவரும் தங்களை கணவன் மனைவி என்று போலி ஆவணம் தயாரித்து, அமெரிக்கா செல்ல விசாவிற்கு விண்ணப்பம் செய்திருந்ததை பாஸ்போர்ட் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதே போல், போலி ஆவணம் அளித்ததாக கோவையைச் சேர்ந்த நர்ஸ் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.