/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவுப்பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி இலவசம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவிப்புமாவுப்பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி இலவசம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு
மாவுப்பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி இலவசம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு
மாவுப்பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி இலவசம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு
மாவுப்பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி இலவசம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு
திண்டிவனம் : மாவட்ட விவசாயிகளுக்கு மாவுப் பூச்சியை அழிக்கக்கூடிய ஒட்டுண்ணி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பெங்களூரூவில் உள்ள தேசிய வேளாண் முக்கியத்துவ பூச்சிகள் ஆராய்ச்சி மையம் சார்பில், போர்டோரிக்கோ தீவுகளிலிருந்து மூன்று ஒட்டுண்ணிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் அதிகளவில் உற் பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அசிரோபேகஸ் பப்பாயே என கூறப்படும் ஒட்டுண்ணி குளவிகள் 50 முதல் 60 முட்டைகள் வரை இடும். இவை 16 முதல் 18 நாட்களில் அடுத்த தலைமுறை பூச்சிகளை உருவாக்கும். இது 5 முதல் 7 நாட்கள் வரை உயிர் வாழும். இந்த குளவிகள் மாவுப்பூச்சியின் இரண்டாம் பருவநிலையின் போது தாக்கி அழிக்கின்றது. திண்டிவனத்தில் உள்ள எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி, ஒட்டுண்ணிகளை விவசாயிகள் இலவசமாக பெற்று பயனடையலாம். இவ்வாறு பேராசிரியர்கள் ராமமூர்த்தி, சாத்தையா தெரிவித்தனர். பூச்சியியல் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் செந்தில்வேல் உடனிருந்தனர்.