/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
முக்கூடல் : நந்தன்தட்டை சாரல்குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாப்பாக்குடி யூனியன் நந்தன்தட்டை கிராமத்தில் உள்ளது சாரல்குளம்.
மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இக்குளத்தில் தான் சேருகிறது.ஆழம் அதிகமாக இல்லாததால் அந்த தண்ணீர் முழுவதும் வீணாகி கருணையாற்றில் சென்றுவிடுகிறது. இங்குள்ள விவசாயிகள் பலமுறை குளத்தை ஆழப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 2005ம் ஆண்டு பொதுப்பணித்துறையினர் குளத்தை ஆய்வு செய்து சுமார் ரூ.2.40 கோடியில் மதிப்பீடுகள் தயாரித்து உலக வங்கி உதவி திட்ட அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே விவசாயிகள் மீண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். வரும் மழைக்காலத்திற்கு முன் சாரல் குளம் தூர்வாவாரப்பட்டு ஆழப்படுத்தி தண்ணீர் நிரப்பி இரண்டு மகசூல் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்பகுதி விவசாயிகள் விரும்புகின்றனர்.