Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/2026ல் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

2026ல் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

2026ல் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

2026ல் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

UPDATED : ஜூன் 11, 2025 12:42 PMADDED : ஜூன் 11, 2025 11:51 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: ''2026ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக் கட்சியின் ஆட்சி தான் நடைபெறும்.'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழத்தில் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. சில பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. நிறைய பேர் தே.ஜ., கூட்டணிக்கு வருவார்கள். இதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

2026ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக் கட்சியின் ஆட்சி தான் நடைபெறும். கீழடியில் நான் நேரில் சென்று ஆய்வு நடத்தி, உதவி தேவைப்பட்டால் மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்.

தமிழ் மொழி

திருக்குறளை 63 மொழிகளில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் பிரதமர் மோடி கொண்டு சேர்த்துள்ளார். காசியிலும் குஜராத்திலும் தமிழ்ச் சங்கங்களை நடத்தியது மிகப்பெரிய பெருமை. தமிழ் மொழிக்கு பா.ஜ., அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

பண்பாடு

'மதவாதம்' குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எங்கும் மதவாதம் இல்லை. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் ஹிந்துக்கள். ஹிந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை. ஹிந்து என்ற மதம் இல்லை,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us