ADDED : ஆக 19, 2011 10:55 AM
புதுடில்லி: அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப்போராட்டத்தை முறியடிக்க பல்வேறு வகைகளில் மத்திய அரசு முயன்று வருவதாக தெரிகிறது.
இதன்படி, ஹசாரேவின் சொந்த மாநிலத்தில் இருந்து அவருடன் பேச சிலரை டில்லிக்கு மத்திய அரசு வரவழைத்துள்ளது. மேலும் சமயத்தலைவர்கள் சிலரும் அன்னா ஆதரவாளர்களுடன் பேசி வருவதாக தெரிகிறது. இத்துடன் பாதுகாப்பு ஏஜென்சியைச் சேர்ந்த சிலரும் அன்னா ஆதரவாளர்களுடன் பேசி, அவர்களை சமாதானப்படுத்த முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.