/உள்ளூர் செய்திகள்/திருச்சி/உறையூர் தேவாங்க நெசவாளர் கூ.சங்கத்தில் அமைச்சர் ஆய்வுஉறையூர் தேவாங்க நெசவாளர் கூ.சங்கத்தில் அமைச்சர் ஆய்வு
உறையூர் தேவாங்க நெசவாளர் கூ.சங்கத்தில் அமைச்சர் ஆய்வு
உறையூர் தேவாங்க நெசவாளர் கூ.சங்கத்தில் அமைச்சர் ஆய்வு
உறையூர் தேவாங்க நெசவாளர் கூ.சங்கத்தில் அமைச்சர் ஆய்வு
திருச்சி: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ரமணா, திருச்சி, உறையூர் தேவாங்க நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தார்.
நூற்பாலைகளிலிருந்து கடன் மூலம் நெசவாளர்களுக்கு நூல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கைத்தறி துணி நூல்களில் புதிய ரகங்கள் உற்பத்தி செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரவேண்டும். நசிந்து போன நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த வாரிசுதாரர்களை மீண்டும் ஈடுபடுத்தி வேலை வழங்க வேண்டும். நெசவாளருக்கு வழங்கப்படும் கூலியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிவபதி, எம்.பி., குமார், ஆர்.டி.ஓ., சங்கீதா, எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பூனாட்சி, சந்திரசேகர், இந்திராகாந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் மனோகர் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.