கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?
கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?
கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?

சூர்யா
ஜோதிகா
ஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பேசும் போது, கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள் எனக்கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.
பிரகாஷ்ராஜ்
இவர் எப்போதுமே பொதுவாக கருத்துக்களை கூறுவது போல் ‛‛பம்மாத்து‛' செய்துகொண்டு, பாஜ கட்சிக்கு எதிராகவும் ஹிந்து மதத்திற்கு எதிராகவும் கருத்துகளை கூறுவது வழக்கம்.

சத்தியராஜ்
சித்தார்த்
செனட்ரல் விஸ்டா திட்டத்தை விமர்சித்த நடிகர் சித்தார்த், தேவையில்லாத திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கும், பொது சுகாதாரத்திற்கும் இந்த நிதியை பயன்படுத்தி இருக்கலாம் எனக்கூறியிருந்தார்.
விஜய் சேதுபதி
ஹிந்தி எதிர்ப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து தெரிவித்தவர் நடிகர் விஜய சேதுபதி. விழா ஒன்றில் பேசும் போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்தவர், காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக்கூறியிருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம், ஹிந்தி மொழிக்கு எதிராக கருத்து தெரிவித்தார். ‛ ஹிந்தி தெரியாது போடா' எனற வாசகத்துடன் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் போட்டோ வெளியிட்டார்.

மக்கள் புறக்கணிக்க வேண்டும்
சந்தர்ப்பவாதிகளாகவும், ஒரு கட்சிக்கு ஆதராகவும், ஹிந்து மத்திற்கு எதிராகவும் பேசும் நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.