ஜனார்த்தன ரெட்டி கைது: காங்கிரஸ் கருத்து
ஜனார்த்தன ரெட்டி கைது: காங்கிரஸ் கருத்து
ஜனார்த்தன ரெட்டி கைது: காங்கிரஸ் கருத்து
ADDED : செப் 05, 2011 03:06 PM
புதுடில்லி: சுரங்க மோசடியில் ஜெனார்த்தரெட்டி அவரது உறவினர் கைது செய்யப்பட்டிருப்பது மூலம் சட்டவிரோத செயல்களின் ஈடுபடுவபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். சுரங்க மோசடி தொடர்பாக கர்நாடக மாஜி அமைச்சர் ஜனார்த்தனரெட்டி அவரது உறவினர் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மத்திய கார்ப்பரேட் விவகாரஙகளுக்கான அமைச்சர் வீரப்பமொய்லி கூறியதாவது:
ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. தவறு செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்றார்.
பாராளுமன்ற விவகராத்துறை அமைச்சர் ராஜிவ்சுக்லா கூறுகையில், ரெட்டி கைது விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை. சி.பி.ஐ.தான் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டம் தனது கடமையினை சரியாக செய்துள்ளது என்றார்.


