/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி மாவட்டத்தில் சிசு மரணம் தமிழக சராசரியை விட அதிகரிப்புதேனி மாவட்டத்தில் சிசு மரணம் தமிழக சராசரியை விட அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் சிசு மரணம் தமிழக சராசரியை விட அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் சிசு மரணம் தமிழக சராசரியை விட அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் சிசு மரணம் தமிழக சராசரியை விட அதிகரிப்பு
ADDED : ஜூலை 11, 2011 10:57 PM
தேனி : தமிழக சராசரியை விட,தேனி மாவட்டத்தில் சிசு மரணம் அதிகரித்துள்ளது.
கடந்த 1940ல் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. இன்று நான்கு மடங்கு அதிகரித்து (2011)121 கோடியை எட்டியுள்ளது. உலக மக்கள் தொகை 681 கோடி. தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம். பிறப்பு: உலகம் முழுவதும் சராசரி பிறப்பு விகிதம் ஆண்டிற்கு 20 ஆகவும். இந்தியாவில் 22.5 ஆகவும், தமிழகத்தில் 16.3 சதவீதமாகவும் உள்ளது.
இறப்பு: உலக அளவில் 8 சதவீதம், இந்தியாவில் 7.3 சதவீதம், தமிழகத்தில் 7.6 சதவீதம் இறப்பு உள்ளது. சிசு: சிசு மரணம் ஆண்டிற்கு இந்தியாவில் 50 சதவீதம், தமிழகத்தில் 28 சதவீதம், தேனி மாவட்டத்தில் 29 சதவீதமாக உள்ளது. சிசு மரணத்தில் தமிழக சராசரியை காட்டிலும் தேனி மாவட்டத்தில் ஒரு சதவீதம் அதிகமாகும். காரணம்: குறைபிரசவம், கர்ப்பிணிகளுக்கு உரிய பரிசோதனை செய்யாமை, வீடுகளில் பிரசவம் போன்ற காரணங்களினால் சிசுமரணம் அதிகம் ஏற்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இதனை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.